"பஸ்ஸு
ஒரு பத்து நிமிஷம் நிக்கும்...
டீ.., காபி குடிக்கறவங்க குடிச்சிட்டு
வந்துருங்க.." கண்டக்டரின் கரகர குரல் அரைதூக்கத்திலிருந்த
என்னை அலட்டி எழுப்பியது.. வெளியே
வேறு.., சாரல் மழை பெய்து
கொண்டு இருந்தது.. மழையின் தாக்கமாக பஸ்
முழுவதும் குளிர் நிரம்பி இருந்தது..
மழைக்காலம் என்பதால் என்னையும்
சேர்த்து ஒரு 10 பேர் தான்
பஸ்ஸில் பயணம் செய்கிறோம்.. அனைவரும்
போர்வைக்குள் சுருண்டு இருந்தனர்..
"ஒரு தம்மும்..,டீயும் அடித்தால் தேவல" என்று நினைத்துக்கொணடு பஸ்ஸை விட்டு இறங்கி.., இந்த
அதிகாலை 2 மணிக்கும் பரப்பரப்பாக இயங்கிக்கொண்டு இருந்த அமுதா டீ
ஸ்டாலுக்குள் நுழைந்தேன்.. "அண்ணா.., ஒரு டீ.., ஒரு
கிங்ஸ்".. காசை கொடுத்து விட்டு,
கிங்சை பற்ற வைத்துக்கொண்டு
அருகிலிருந்த டேபிளில் அமர்ந்தேன்..
ஐயோ..
10 மணிக்கு அம்மா போன் பண்ணி
இருப்பாளே..!! மறந்துட்டோமே என்று செல்லை எடுத்துப்பார்த்தேன்.. அதில் காட்டிய 10 மிஸ்ட்
கால்சும், 12 மெசேஜும் அயர்ச்சியை கொடுத்தன.. அம்மா 4 தடவை பண்ணி
இருந்தாள்.. அவளுக்கு ஒரு நாளைக்கு 3 தடவை
என் கூட பேசாவிட்டால் நாள்
ஓடாது.. அவளுக்கு தெரியும் இன்று நான் ட்ராவலில்
இருப்பேன் என்று... தூங்கியிருப்பாள்.. காலை முதல் வேலையாக
அம்மாவிடம் பேச வேண்டும் என்று
நினைத்துக்கொண்டேன்..!!!
மீதி அனைத்துமே.., வைஷ்ணவியால் பண்ணப்பட்டிருந்தது..!!! "வைஷ்ணவி".. என் உலகம்.., எனக்காக
வாழ்பவள்.., என் காதலி.. ரொம்ப
நல்லவள்.. காலேஜில் ஒரே வகுப்பில் நான்கு
வருடம் என்னுடன் படித்தவள்.. அவளிடம் மொத்தமாகவே 4 தடவை
தான் பேசி இருக்கிறேன் அந்த
4 வருடம் முழுவதும்.. கடைசி நாள் வகுப்பின்
போது.., அவளே அவள் காதலை
தனிமையில் சொல்ல விக்கித்துப்போனேன்..
அன்று முதல் என் காதலியாக நான்
பண்ணும் சேட்டைகளை தாங்கி வருகிறாள்..!! நானும்,
அவளும் சென்னையில் வெவ்வேறு ஐடி
நிறுவனங்களில் வேலை பார்த்தாலும்.. ரெண்டு
நாளைக்கு ஒருமுறை பார்த்து காதல்
செடிக்கு தண்ணீர் ஊற்றிவிடுவோம்..
வார இறுதியில்., சொல்லவே வேண்டாம்.. அவளுக்கு
தான் மெசேஜ் டைப் பண்ணி
கொண்டு இருந்தேன்.. "Sry Dear.., Thoongitten.. Morning Bangalore poitu call panra di.. Gud Nit.., Sweet Dreams" ன்னு அனுப்பி விட்டு
திரும்பினேன்...
தூரத்தில் மறுபடியும் கண்டக்டரின் குரல்.,
"யப்பா..
இந்த பெங்களூர் பஸ்ல வந்தவங்களாம் வாங்க...
பஸ் கிளம்ப போகுது" ன்னு உரக்கமாய்
அழைத்தது..
ஓடி ஏறியதும்., கண்டக்டர்
"இந்த பஸ்ஸா தம்பி"
ன்னு கேட்க..,
"ஆமா னே" ன்னு
சொல்லிவிட்டு நகர்ந்தேன்..
" உங்க பக்கத்துல இருந்தவங்களாம்
வந்துட்டாங்களான்னு செக் பண்ணிகோங்க"
ன்னு கண்டக்டர் மறுபடியும் கத்தினார்..!!
ஒருத்தரும் அவரை சட்டை செய்ததாக
தெரியவில்லை.. அவரவர் உறக்கத்தை தொடர்ந்தனர்..
நான் தான்.., "அங்க கடைல யாரும்
இல்ல னா.. நீங்க கிளம்புங்க"
ன்னு உறுதி குரல் குடுத்தேன்..
கண்டக்டர் உடனே டிரைவர் சைடு
திரும்பி..,
"கிளம்பு பா.. குமரவேலு..
நல்லா அடிச்சு ஓட்டு.. 6 மணிக்குள்ள பெங்களூர் போய்டனும்" என்று சொல்லி கொண்டே அவர்
இருக்கையில் சாய்ந்தார்..!!!
பஸ் கிளம்பி அரை மணி
நேரம் ஆகியும்.., அந்த வாக்கியம்
"குமரவேலு.. நல்லா அடிச்சு ஓட்டு"...,
என் மூளைக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது..
"குமரவேல்"... பதினாறு வருட நண்பன்.. ஒன்றாம் வகுப்பில்.., அனைவரும் பதில் தெரியாமல் மிஸ்சிடம்
கை நீட்டி அடிவாங்கிக்கொண்டு
இருக்கும் போது.., இவன் அந்த
மிஸ் கையே கடிச்சிவிட்டு வீட்டுக்கு
ஓடிவிட்டான்.. ரெண்டு நாளைக்கு தலையை பத்தி தான் ஸ்கூலே பேசுச்சு..!!! மூன்றாம்
நாள் வந்தான்.. அவன் பக்கத்துல போகவே
பயந்தார்கள்..!! அவனோ நேராக என்னிடம்
வந்து என் அருகில் அமர்ந்து..,
"உன் கிட்ட மிஸ் எதாவது ப்ராப்ளம் பண்ணா சொல்லு.. கடிச்சிறலாம்"
ன்னு சொல்லும் போது நானும் அவனை
ஒரு வீரனாகவே பார்த்தேன்..
அடுத்த
நாளிலிருந்து அவன் என் நெருங்கிய
நண்பன் ஆனான்..!! அவன் கூடவே இருப்பதால்..,
என்னையும் பார்த்து ஸ்கூலே பயந்தது..!!!
ஒரு கட்டத்தில்.., எல்லோருக்கும் தலையாக மாறிவிட்டான்.. பெரிய
வகுப்பு மாணவர்களும்.., எங்கு இவன் கடிச்சிற போறான் என்று
ஒதுங்கியே போனர்...
வகுப்பும்,
வயசும் ஏற ஏற எங்களது
குறும்புத்தனங்களும் நட்பும் இன்னும் அதிகமாகியது..!!!
காற்றும் பிரிக்க இயலா நண்பர்கள்
ஆனோம்..!!! பதினொன்றாம் வகுப்பில்., என் இரு நண்பர்களின்
தந்தைமார்கள் தவறிவிட்டனர்.. அதில் இவன்., குமரவேலின்
தந்தையும் ஒருத்தர்.. எல்லோரும் இவனுக்காக கவலைப்பட்டுக்கொண்டு இருக்கையில்.., இவன்
மூன்றாவது நாள் அசால்ட்டாக கிளாஸ்க்கு வந்தான்..
"அதான் போய்ட்டார்.. இப்ப
என்ன டா பண்ணா சொல்ற..
அவர் என் மீது வைத்து
இருந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டாமா...??"
என்று அவன் கேட்ட விதம்
என்னை அவன் ரசிகனாக்கியது..!!! இன்னொரு
பையன் 1 மாதம் கழித்தே பள்ளி
வந்தான்...
பன்னிரெண்டாம் வகுப்பிலே அவனுக்கு காதல் மலர்ந்து விட்டது...
அவனிடம் பிடிக்காத ஒன்றே இதான்.. எதிலும்
அவசரம்..!!! அதற்கும் அவன் பதில் வைத்து
இருப்பான்..
"நீ முந்தவில்லை என்றால் உன்னை ஒருவன் முந்திடுவான் என்று"..
அதிலும் அந்த பெண்ணின் அப்பன்
ஒரு போலீஸ்கார்..!! பலமுறை அவள் அப்பனிடமே
இவன் அடி வாங்கி இருக்கிறான்..!!!
இருந்தும் அந்த தெய்வீக காதல் காலேஜ்
பருவத்திலும் தொடர்ந்தது..!!!
அவனும்.,
நானும் வெவ்வேறு காலேஜில் படித்தாலும்.., தினமும் போன் பண்ணி அவன் காதலை
சொல்லி உயிரை எடுப்பான்.. திடீரென்று
நான்காவது வருடம் முடிந்ததும்.., என்
வீட்டின் முன் வந்து நின்று
என்னை அழைத்தான்..
"டேய்
சூர்யா(சாரிங்க.., சூர்யா தான் என்
பேரு)., வாடா.. மயிலம் கோவிலுக்கு
போகணும்" ன்னு...
நான்.., "எதுக்கு டா அங்க
போகணும்.. யாருக்காவது கல்யாணமா..?? பொதுவாக கல்யாணம் பண்ண தான்
அந்த கோவிலுக்கு போவாங்க" என்றேன்..
"ஆமா டா எனக்கு
தான்.. எனக்கும்., ரூபாக்கும்(அவன் காதலியின் பெயர்..
எனக்கு தங்கை முறையென்று சொன்னான்)
தான்" என்று அவன் சொன்ன
உடனே நடுக்கம் ஆரம்பித்து விட்டது..
நான்
"டேய் என்ன டா சொல்ற..??
ஏன் டா இந்த முடிவு..
அவன் அப்பன் போலீஸ்காரன் டா..
அடிச்சு நம்ம ரெண்டு
பேரையும் உள்ள வச்சிடுவான் டா"
என்று எச்சரிக்கை மணி அடித்தேன்..!!!
அவனோ அவன் முடிவில் உறுதி
ஆக இருந்தான்..!!! அந்த பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்ப்பதால் இந்த முடிவுன்னு
சொன்னான்..!!! அடுத்தநாள்.., கல்யாணத்திற்கும் ரெடி ஆனோம்..
ஆனால்..,
அவனது இந்த முடிவு.., அவனுக்கே
முடிவாய் அமையும் என்று ஒருபோதும்
நான் நினைக்கவில்லை..!!!
நானும்
என் நண்பர்கள் 7 பேரும்., அவர்களுடன்
5 பைக்கில் கோவிலுக்கு சென்றோம்..!!!
"வேகமா
வாங்க டா வேகமா"
என்று சொல்லியவன் எதிரே வந்த பேருந்தை
கவனிக்க தவறிட்டான்..!!!
"டேய்,
டேய்.., பஸ் டா பஸ்
டா" என்று நாங்க சொல்லும்
முன்னரே அந்த பேருந்துடன் மோதிய
வேகத்தில் அவனும்.., அவளும் சம்பவ இடத்திலே
எங்கள் கண்முன்னே இறந்தனர்..!!
நான் பிறந்த போது கதறி
அழுததாக என் அம்மா சொன்னார்..
அதன் பிறகு சுமார் 22 வருடங்கள் கழித்து நடுரோட்டில் கதறி
அழுதேன்.. ஒரு அரைமணி நேரத்தில்
எல்லாம் முடிந்தது.. அவன் திருமணத்திற்கு வாங்கிய
மாலை.., அவன் முடிவுக்காக சாத்தப்பட்டது...!!!
சிரித்து கொண்டே இருப்பான்.., எங்களையும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பான்.. இன்று எங்களை அழவும் வைத்து விட்டான்.. உலகே வெறுமையான ஒரு
உணர்வு..!! இந்த இழப்பிலிருந்து மீளவே
எனக்கு மாதம் பல பிடித்தது..!!
"கிருஷ்ணகிரி..,
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரில
யாராவது இறங்குறீங்களா..??" என்ற கண்டக்டரின் குரல்
என்னை நினைவுக்குக் கொண்டு வந்தது..!! ஆமாம்..
இன்றோடு அவன் இறந்து 2 வருடம்.,
3 மாதம் ஆகிறது.. அவனை இழந்தபின் இந்த
உலகம் என்னை பலவாறாக மாற்றி
இருந்தது..!!
ஒரு உயிரின் இழப்பை அனுபவித்த நான்.., என்னை போல் யாரும் அவர்களது நண்பனை இழந்துவிட கூடாதென்று.., சாலையில் விவேகமான பயணம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு நான் ஒரு பயனாக
இருக்கிறேன்..
இன்று கூட பெங்களூர்க்கு அதற்க்கு
தான் போய்கொண்டு இருக்கிறேன்.. நானும் என்னுடன் வேலைபார்க்கும்
என் நண்பர்களும் சேர்ந்து எடுத்த சாலைப்பயணம் தொடர்பான "அதிவேகம்"
என்ற குறும்படம்.., பெங்களூரில் நடைபெறும் தென்னிந்தியா திரைப்பட நிகழ்ச்சியில் திரையிடப்படுகிறது..!!!
ஆமாம்..
நீங்கள் நினைப்பது சரியே.. கதை என்
நண்பனின் கதை தான்... ஆனால்
இம்முறை என் நண்பனாக நானும்..,
ரூபாவாக என் வைஷ்ணவியும் பயணம்
செய்துள்ளோம்...!!!
விவேகமான பயணம் உங்கள் உயிரை மட்டுமல்லாது.., உங்களையே நம்பி இருக்கும் பலரது உணர்வுகளுக்கும் உயிர் தரும்..!!!
-பிரபுவின் நிழல்-

அருமை......!! கன்னி முயற்சி வெற்றி..........
ReplyDeleteஒற்றுப் பிழைகள் அதிகம் உள்ளன.......
திருத்திக் கொள்ளவும்........ :)
நன்றி தலைவரே..!! சரிசெய்து கொள்கிறேன்
Deletesema da asathita!! da kathai nalla muthirichi theriuthu da expectin more stories..from u da
ReplyDeleteThankz da.. :) :) Kandipa Unnoda expectation fulfill panra mathiri yeluthuren da.. :):)
Deleteஅற்புதமான பதிவு....:)
ReplyDeleteநன்றி அண்ணா...!!!
Deletesuper na.. sema story..:) :)
ReplyDeleteThankz da.. :)
Deletenalla muyarchi,,,,kathai yedharthamaga irupathu enaku pidithu irukirathu,,,,,,,,
ReplyDeleteThankz da... :) :)
Deleteprabu romba nallarku.... All the best....
ReplyDeleteThankz.. :) :)
DeleteGreat ....Experience while reading.....!!!
ReplyDelete#Tamil il type pannrathu epdi nu solli tharavum......!!!
Thankz Krishna..!!! Try thz http://tamil.changathi.com/ An online converter.. Amma nu adichu space bar press panna athuvae அம்மா nu maaridum..!!!.
Deletenallarku prabu:):) andha ponnoda appa police,,, andha police adi elam engayo keta mathiri eh iruku,,,,:):):) own story ah,,,
ReplyDeleteThankz da.. :) :) Lit ah..!!! ;) :)
DeleteDai prabhu, Seyma... :-)
ReplyDeleteThankz Mapla.. :) :)
Deleteஉன் முதல் பதிவு எனக்கு உன் அடுத்த பதிவுக்கான ஆவலை அதிவேககப் படுத்துகிறது
ReplyDeleteமிக்க நன்றி.. உங்கள் ஆவலை என் அடுத்த படைப்பு பூர்த்தி செய்யும்
Deleteawesome!!!!!!!!
ReplyDeleteThankz Machi.. :) :)
Deleteஆரம்பித்த சிறிது நேரத்திலே இதுவும் இன்னொரு காதல் கதை தானோ என்ற சலிப்பிலே உனக்காக முடிவை படித்தேன், பின் விளங்கினேன் இது காதல் கதை அல்ல, நம் கதையையே முடிக்கும் வேகத்தின் கதை என்று! Dramatically explained that Speed not only kills you but also the happiness of everyone around you :) btw யாருப்பா அந்த வைஷ்ணவி :P
ReplyDeleteநன்றி அண்ணா..!!! இன்னும் 4வது வருடம் முடியவில்லையே அண்ணா..!!! கடைசி நாள் தான் தெரியும் "என் வைஷ்ணவி" யாரு ன்னு...!!
Deletenallaa eruku da...
ReplyDeletethankz da
Deletegood try da..it was so realistic..all the best da !!
ReplyDeleteThankz da.. :) :)
Deleteகதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி அண்ணா...!!!
Deleteமிக அருமை.... :)
ReplyDeleteநன்றி..!!!
Deleteகதையின் நாயகனே. ..வாழ்க வளர்க.
ReplyDeleteகதையின் நாயகனே. ..வாழ்க வளர்க.
ReplyDelete