நண்பர் ஒருவர் மாற்று கல்வியை கொண்டுள்ள ஒரு கோயம்பத்தூர் பள்ளி பற்றி கவிதை ஒன்றை எழுதி தர சொல்லி கேட்டிருந்தார். அதற்காக தான் இந்த கவிதையை எழுத முற்பட்டேன்.
நாளொன்றாய் சுமை ஏறிட,
திசைபலவாய் அழுத்தம் கூடிட,
பாடி திரியும் பாலகர்கள்
பாவமாய் பள்ளிகளில் அலைவதேனோ?
மாற்றமாய் ஒரு கல்வி இருக்கு,
மகிழ்ச்சியாய் பல பாடங்கள் இருக்கு,
தாவி குதித்திட தயக்கம் எதற்கு?
வாடியதாய் பூக்கள் இல்லை,
அழுத்தமாய் ஏதும் இல்லை,
பெரும் புத்தகச்சுமையும் இங்கே இல்லை.
வேடிக்கையாய் கற்றலில் வலம் வருவோம்,
பிடித்தவற்றை மட்டும் படித்தறிவோம்,
சிறு பறவையாய் பாடிப் பறப்போம்,
அந்த நிலவையும் எட்டித் தொடுவோம்.
- பிரபு கந்தசாமி
No comments:
Post a Comment