Saturday, March 13, 2021

ராஜேஷ்குமாரின் கடைசி தீக்குச்சி - புத்தக விமர்சனம்

அப்பாடா, கடைசியா மறுபடியம் எழுத ஆரம்பிச்சாச்சு. கடைசியா 2019 ஜனவரி 21 ஆம் நாள் புத்தக விமர்சனம் போட்டேன். அதுக்கு அப்புறம் நெறைய புத்தகம் படிச்சாலும், விமர்சனம் எழுத நேரம் கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கலன்னு சொல்றத விட, சோம்பேறி ஆகிட்டேன்னு தான் சொல்லணும். சோம்பறித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் மறுபடியும் விமர்சனம் செய்ய வந்து இருக்கிறேன். 

கொரோனாக்கு அப்புறம் வந்த புத்தக கண்காட்சி. ஏற்கனவே நம்ம கிட்ட படிக்க நெறைய புத்தகம் இருக்கு, ஒரு 10 புத்தகம் மட்டும் வாங்குன போதும்ன்னு போன நான், கடைசில 21 புத்தகங்களோட வந்தேன். சரி, இந்த வருடம் நெறைய படிக்கிறோம், தட்டுறோம், தூக்குறோம்  ன்னு என்ன புத்தகத்தோடு ஆரம்பிக்கலாம்ன்னு யோசிக்கும் போது தான் ராஜேஷ்குமாரின் கடைசி தீக்குச்சி சிக்கிச்சு. இப்போ நீங்களும் என்கிட்டே சிக்கி இருக்கீங்க. வாங்க விமர்சனத்துக்கு போவோம். 

கடைசி தீக்குச்சி














ஆசிரியர்: ராஜேஷ்குமார்

பதிப்பகம்: RK பப்ளிஷிங்

விலை: 280 ரூபாய்

பக்கங்கள்: 332

புத்தகம் அறிமுகமானது எப்படி:

கோவிந்தராஜனுக்கு நெறைய முன்கதைகள் உண்டு. அதை சுருங்க சொன்னாலும், 12-ஆம் நூற்றாண்டு வரையிலாவது போக வேண்டும்ன்னு தசாவதாரத்துல கமல் சொல்லுவாருல, அப்படி ஒரு முன்கதை உண்டு எனக்கும் ராஜேஷ்குமார் நாவல்களுக்கும். என் அக்காவிற்கு இந்த கிரைம் திரில்லர் நாவல் படிக்கும் பழக்கம் உண்டு. ஒருநாள் நேரம் போகவில்லையே என்று கல்லூரி விடுமுறையில் அவங்களிடம் இருந்து வாங்கிய புத்தகம் தான் ராஜேஷ்குமார் திரில்லர் நாவல். அப்போதுலாம் வாரம் ஒருமுறை ஒரு பாக்கட் சைஸ் நாவல் வரும் 10 ரூபாய்க்கு. சில பழைய புத்தக கடைகளில் 2.50 ரூபாய்க்கு ராஜேஷ்குமாரின் பழைய நாவல்கள் விற்கும். அதை வாங்குவதும், படிப்பதும் ஒரு பெரிய பொழுதுபோக்கவே மாறியது. யாரோ யாரையோ கொலை செய்து இருப்பார்கள், அல்லது ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து இருக்கும். அதை தனியார் துப்பறியும் ராஜாக்களான விவேக், விஷ்ணு கண்டுபிடிப்பார்கள். ராஜேஷ்குமார் நாவல்கள் படிக்கும் அனைவர்க்கும் இந்த விவேக், விஷ்ணு, ரூபலா கதைமாந்தர்கள் அத்துப்படி, பிடித்த கதைமாந்தர்கள் கூட. இன்றும் என்னிடத்தில் புதுசு, பழையது என 50-க்கும் மேற்பட்ட ராஜேஷ்குமாரின் பாக்கெட் சைஸ் நாவல்கள் உள்ளன. இப்போதும் வருகிறது. ஆனால் 15 ரூபாய் ஆகிவிட்டது.  இப்படி பழக்கப்பட்ட எனக்கு, இந்த புத்தக கண்காட்சியில் ஆச்சரியம். எப்போதும் 100 பக்கத்திற்கும் குறைவாய் வரும் சிறிய பாக்கெட் சைஸ் நாவலுக்கு இடையில், கொஞ்சம் பெரியதாய், 300 பக்கங்களுக்கு மிகையாமல் ஒரு நாவல் வந்தால் வாங்காமல் விட மனசு எப்படி ஒத்து வரும். அதன் வாங்கியாச்சு. இப்படி படிச்சு படிச்சு எனக்குள்ளவே ஒரு துப்பறியும் புலி தூங்கிட்டு இருக்கு. யாருக்காவது துப்பறிய வேண்டுமென்றால் என்னை கூப்படவும். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் மாதிரி இல்லாவிட்டிலும், நம்ம புரட்சி தளபதி விஷால் அளவுக்காச்சும் முயற்சி பண்ணுவேன். 

(தூரத்தில், இவனுக்கு காலையில நைட் கழட்டி வெச்ச கண்ணாடியை கண்டு புடிக்கவே நாங்க வேண்டும், இவன் போய் எதையோ கழட்ட போறானாம் என மனைவி மற்றும் அம்மாவின் கோரஸ் குரல் கேக்குறது. சோகமான இசை வாத்தியங்கள் ஒலிக்கப்படுகிறது)

விமர்சனத்திற்குள் போவோம், வாங்க!

விமர்சனம்:

பொதுவாவே ராஜேஷ்குமாரின் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதால், கதை களங்கள் கோவையை சுற்றியே அமையும். என் கல்லூரி கால வாழ்வும், நான் வாக்கப்பட்ட ஊரும் கோவை என்பதால், கதையோடு சுலபமாக ஒன்றிவிட இயலும். இந்த கதையிலும் அப்படியே. 

அத்திபாளையம் பிரிவில் கதை ஆரம்பிக்கிறது. காவல்துறை சோதனையில் ஒரு வேனில் இரண்டு குரங்குகள் இறந்த நிலையிலும், ஒரு குரங்கு மயக்கமான நிலையிலும் கிடைக்கிறது. மருத்துவ சோதனையில், ஆக்குலார் இம்பிளான்ட்(Ocular Implant) முறையில் மூன்று குரங்குகளுக்கும் செயற்கை கண் பொருத்தப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கும் நிமிடங்களில், மூன்றாவது குரங்குகிற்கும் உறுப்புகள் செயலிழந்து இறக்கும் தருவாயை அடைகிறது. இதான் கதையின் கரு. யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்பதற்காகவே இந்த 332 பக்கங்களும். 

எங்கடா நம்ம கதாநாயர்கள் விவேக், விஷ்ணு தேடிட்டு போன, அவர்கள் இல்லாமல் காவல்துறையின் போக்கிலேயே கதை விரிகிறது. சரி, இந்த கதைலாச்சும், தனியார் துப்பறியும் மாந்தர்கள் இல்லாமல், காவல்துறையே கண்டுபிடிக்கட்டும் ன்னு விட்டுட்டாரு போல ராஜேஷ்குமார். விவேக், விஷ்ணுவை காவல்துறையிலாச்சும் சேர்த்து விட்டு இருக்கலாம். பச். 

இது ஒரு ஆபத்தான பரிசோதனையின் விளைவுகள் தான் என்று காவல்துறை கண்டுபிடிக்கும் போது, கதைநாயகன் சபரி என்ட்ரி. அவன் தான் இந்த பரிசோனாதையை பண்ணவனே. பேசிக்கலி, ஹீ ஹிஸ் த ஹீரோ அண்ட் ஹீ ஹிஸ் த வில்லன் டூ. கமல் பேன் போல. 

இந்த பரிசோதனை காவல்துறையிடம் இருந்து மறைக்க முயலும் வேளையில், இந்த பரிசோதனையை பண்ண சொன்னவன், அதை மேற்பார்வை செஞ்சவன் ன்னு ஒருத்தன் ஒருத்தன சாக, வீட்டுலயும் சில குழப்பங்கள் ஏற்பட, சபரிக்கு தலைவலி மேல் தலைவலி. திடீர்ன்னு அவன் வீட்டுல தூங்க வந்த அவன் மனைவியின் தோழியும் மர்கயா. தோழி ஏன் வந்தா ன்னு கேக்காதீங்க. அது வேற ஒரு தெய்வீக காதல் கதை. சப் பிளாட். யார்டா இந்த கொலைகள் பன்றானு தெரியாம, காவல்துறைக்கும் போக முடியாம, சோ, வாழ்க்கையே ஒரே சேட் ன்னு பொலம்பிட்டே யார் டா இதுக்கு காரணம், யார் கொலைகளை செஞ்சாங்க, அதற்கான காரணங்களை யார் கண்டுபிடிச்சாங்க, காவல் துறையா, சபரியா, ஏன் இந்த பரிசோதனை பண்ணாங்க என்பதே மீதி கதை.

எப்போதும் 100 பக்கங்கள் எழுதறவர், 300 பக்கங்கள் எழுத சொல்லிட்டாங்களே ன்னு, 100 பக்கங்களுக்கு எழுதின கதையை, கதைக்குள் கதைன்னு மனைவிடோட தோழி, தோழிக்கு ஒரு காதலன், அவன் ஒரு டூமாங்கோலி ன்னு நீட்டி முழக்கிட்டார். சில லாஜிக் விதிமீறல்கள். அட யாருய்யா இப்போ லாஜிக் லாம் பாக்குறது ன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. இருந்தாலும் பரவால்ல, த்ரில்லர் விரும்பிகள் தாராளமாய் படிக்கலாம். கடைசி 75% வரை சொய் ன்னு போகும்.  சங்கர் படத்துக்கு ரவிக்குமார் திரைக்கதை எழுதுனா உங்களுக்கு பிடிக்குமா, பிடித்தால் படியுங்கள். 

இருந்தாலும் ஏன் யா விவேக், விஷ்ணுவ கழட்டி விட்டுட்ட. மறுபடியம் பச்.

சரி, 2021 வருடத்தை ஒரு புத்தகத்தோடு ஆரம்பிச்சாச்சு. வருட தொடக்கத்தில் இந்த மாதிரியான புத்தங்களையே நான் படிக்க விரும்புவேன். சீக்கிரம் படித்து முடிக்கலாம், அடுத்த புத்தகத்தை சீக்கிரம் ஆரம்பிக்கலாம் என்ற என் எண்ணம். 

இந்த வருடத்தில் உங்களால் படிக்கப்பட்ட முதல் புத்தகம் என்ன?

அடுத்த புத்தக விமர்சனத்தில் சந்திப்போம்.


அன்புடன்

-பிரபு கந்தசாமி

6 comments: